இனி உடலில் உள்ள ஈரத்தை ஒரு மெல்லிய துணி கொண்டு மெதுவாக ஒத்தி எடுத்து துடைக்க வேண்டும். உடலில் உள்ள ஈரத்தை துடைத்து எடுக்கா விட்டால் கபன் துணி ஈரமாகி விடும்.(ளூழற யஉவழைn hழற வழ றipந ழகக றநவ னசழிள றiவா வாந hநடி ழக ய உடழவா) கபனிடுதல்
முதலில் கபனை கட்டுவதற்காக நீளமான டேப் போல துணியிலிருந்து கத்தரித்து எடுத்த துண்டுகளை குறைந்தது மூன்றினை மேஜையில் போட வேண்டும். தலைக்கு ஒன்று, இடுப்புக்கு ஒன்று, காலுக்கு ஒன்று. தேவை பட்டால் நான்கு அல்லது ஐந்து துண்டுகள் பயன்படுத்தலாம். கபன் பிரிந்து உடல் வெளியே வராமல் இருக்க தான் இந்த கட்டு துணிகள். ஏற்கனவே சொன்னது போல 56 இஞ்ச் பன்னா அகலம் உள்ள மேட்டூர் மல் வாங்கினால் கபன் துணி உடலை சுற்றி கட்ட சரியாக இருக்கும் அது கிடைக்க விட்டல் 36 இஞ்ச் உள்ள துணியை வாங்கி நாம் இரண்டை ஒன்று சேர்த்து மெஷினில் தைத்து மூட்டிக் கொள்ளலாம். -7-
துணியை இரண்டு பக்கமும் இழுத்து கட்ட மய்யித்தின் நீளத்தை விட தலை பக்கம் ஒரு அடி கால் பக்கம் ஒரு அடி மிச்சமாக இருக்கும் படி வெட்டிக் கொள்ள வேண்டும். முதலில் விரித்து வைத்துள்ள டேப்கள் மீது துணியை விரிக்க வேண்டும். அதற்கு மேல் இன்னொரு துணியை விரிக்க வேண்டும். அதற்கு மேல் ஈரம் துடைத்த மய்யித்தை படுக்க வைக்க வேண்டும். ஜிப்பா எனப்படும் தலை புகும் அளவுக்கு ப வடிவத்தில் வெட்டி வைத்த துணியை மய்யித்தின் மீது போட்டுதலையை லேசாக தூக்கி வெட்டப் பட்ட அந்த ஓட்டை பகுதியை நுழைத்துபோட வேண்டும். பிறகு இரண்டு கால் பெரு விரலையும் சின்ன துணி துண்டை கொண்டு சேர்த்து கட்ட வேண்டும். பிறகு முதல் துணியை எடுத்து மய்யித்தை சுற்றி காலை தூக்கி அதன் மேல் வைக்க வேண்டும். இரண்டாவது துணியையும் அதே போல சுத்தி காலை தூக்கி வைத்து சிறிய டேப்களைக் கொண்டு கால் பக்கம்
இழுத்து முடிச்சு போட வேண்டும். இது போல பெண்களுக்கு மொத்தம் 5 துணிகள் கொண்டுகுபனிட வேண்டும்.
சிலர் மைய்யித்தின் கைகளை தக்பீர் கட்டி இருப்பது போல் வைத்து விடுகிறார்கள். இது தவறானது. இதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. கைகளை உடலோடு ஒட்டியபடி நீட்டிய படி பக்கவாட்டில் வைத்து விடவேண்டும். மடக்கி வைத்து இருந்தால் சந்தாக்கில் அல்லது குழியில் இறக்கும் போது சிரமமாக இருக்கும்.(னநஅழ)
நெருங்கிய உறவினர்கள் மய்யித்தை தீதார் பார்த்த பிறகு தலை பக்கமும் முடிச்சுப் போட்டு கட்டிவிட வேண்டும். எளிதாக அவிழ்க்கும் படி முடிச்சு போட வேண்டும் அப்போதுதான் கபருஸ்தானில் குழியில் இறக்கிய பிறகு சிரமமில்லாமல் அவிழ்த்து முகத்தை கிப்லா பக்கம் திருப்பி வைக்கலாம்.
சகோதரிகளே நம் குடும்பத்தினரின் மய்யித்தை நாம் தான் குளிப்பாட்ட வேண்டும். கூலிக்கு ஆள் வைக்க கூடாது. அதுதான் மௌத்தாகி விட்ட நம் முன்னோருக்கு நாம் செய்யும் கடமை. பர்ளு கிபாயா வாகும். அதாவது இந்த மஹல்லாவிலுள்ள ஒரு பெண் மௌத்தாகி விட்டால் இந்த கடமை இந்த மஹல்லாவிலுள்ள அனைத்து முஸ்லிம் பெண்களின் மீதும் கடமையாகும். ஆனால் யாரேனும் சிலர் செய்து விட்டால் அனைவர் மீதும் கடமை நீங்கி விடும். யாருமே செய்யா விட்டால் அனைவர் மீதும் பாவமாகும். ஆகவே இங்கே வந்திருக்கும் அனைத்து சகோதரிகளும் இந்த கடமையை செய்ய கற்றுக் கொள்வோமாக.
இதுவரை செய்து காட்டியதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment